இந்த கோவிட் பெருந்தொற்று துவங்கியதில் இருந்து பல மக்களின் வாழ்வாதாரங்கள் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளன. அது போன்ற சூழ்நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் நிறுவனம் (Aditya Birla Capital Foundation) உதவித்தொகை ஒன்றை அறிவித்துள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம் :
கோவிட் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகள்.
தகுதிகள் : மேற்கூறிய மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலிருந்து இளங்கலை கல்விக்கு இடையில் பயில்பவராக இருக்க வேண்டும்.
உதவித்தொகை : மேற்சொன்ன மாணவர் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் பயில்பவராக இருந்தால் அத்தகைய மாணவர்களுக்கு ரூ.24000, ஒன்பதில் இருந்து பனிரெண்டாம் வகுப்பிற்குள் இருப்பவர்களுக்கு ரூ.3000, பொது இளங்கலை கல்வி பயில்பவர்களுக்கு ரூ.36000, தொழில் சார்ந்த இளங்கலை கல்வி பயில்பவர்களுக்கு ரூ.60000 உதவித்தொகையாக வழங்கப்படும் .
விண்ணப்பிக்க இறுதி நாள் : சனவரி 31, 2022
உதவிக்கு : adityabirlacapital@buddy4study.com
தொலைபேசி : 011-430-92248 (Ext-268)