12 மார்., 2025
by
Porul
வங்கி சேவைகள் பெருகிவிட்ட இந்த காலத்தில், சேமிப்பு கணக்கு (Savings Account) மற்றும் நடப்புக் கணக்கு (Current Account) ஆகிய இரண்டு வகையான கணக்குகளும் முக்கிய நிதி கருவிகளாக விளங்குகின்றன. பணம் சேமிக்க, பரிவர்த்தனை செய்ய, மற்றும் நமது நிதி தேவைகளை நிர்வகிக்க இந்த கணக்குகள் உதவுகின்றன. இருப்பினும், இவை இரண்டும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை, அவற்றின் அம்சங்களிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
- சேமிப்பு கணக்கு: பெயர் குறிப்பிடுவது போலவே, சேமிப்பு கணக்கு முக்கியமாக தனிநபர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான முறையில் பணத்தை இருப்பு வைக்கவும் உருவாக்கப்பட்டது. சாதாரண மக்கள் தங்கள் அன்றாட சேமிப்பு, மாத வருமானம், ஓய்வூதியம் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து, அதற்கு குறைந்த வட்டியையும் பெற இது பயன்படுகிறது.
- நடப்புக் கணக்கு: நடப்புக் கணக்குகள் முக்கியமாக வணிக நோக்கங்களுக்காகவும், அதிக எண்ணிக்கையிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஏற்றது. வணிகர்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகள் போன்றவர்கள் தங்கள் தினசரி வியாபார நடவடிக்கைகளுக்காக, பணம் செலுத்துதல், பெறுதல், மற்றும் நிர்வகித்தல் போன்ற தேவைகளுக்கு இந்த கணக்கை பயன்படுத்துகிறார்கள். வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.
முக்கிய வேறுபாடுகள் – ஒப்பீடு அட்டவணை:
அம்சம் |
சேமிப்பு கணக்கு (Savings Account) |
நடப்புக் கணக்கு (Current Account) |
முக்கிய நோக்கம் |
சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், பாதுகாப்பான இருப்பு |
வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், அதிக பரிவர்த்தனைகள் |
வட்டி வருமானம் |
உண்டு, பொதுவாக குறைவாக இருக்கும் (வங்கியை பொறுத்து மாறுபடும்) |
பொதுவாக வட்டி வருமானம் கிடையாது |
பரிவர்த்தனை வரம்புகள் |
உண்டு, ஒரு நாளைக்கு அல்லது மாதத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் |
பொதுவாக பரிவர்த்தனை வரம்புகள் குறைவு அல்லது கிடையாது, அதிக பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும் |
யார் திறக்கலாம் |
தனிநபர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகள் |
வணிக நிறுவனங்கள், தொழில் முனைவோர், கூட்டாண்மை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் |
குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) |
பொதுவாக குறைவாக இருக்கும், சில கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை |
பொதுவாக அதிகமாக இருக்கும், குறைந்தபட்ச இருப்பு கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் |
ஓவர் டிராஃப்ட் வசதி |
பொதுவாக கிடையாது |
சில வங்கிகள், தகுதியான நடப்புக் கணக்குகளுக்கு ஓவர் டிராஃப்ட் வசதி வழங்கலாம் |
சேவைகள் |
காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, இணைய வங்கி, மொபைல் வங்கி |
காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, இணைய வங்கி, மொபைல் வங்கி, வணிக பரிவர்த்தனை வசதிகள் அதிகம்
|
வட்டி வருமானம்:
சேமிப்பு கணக்கில், நீங்கள் உங்கள் கணக்கில் வைத்துள்ள சேமிப்பிற்கு வட்டி வருமானம் பெறுவீர்கள். இது பொதுவாக மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ கணக்கில் வரவு வைக்கப்படும்.
பரிவர்த்தனை வரம்புகள்:
சேமிப்பு கணக்குகளில் பரிவர்த்தனைகளுக்கு சில வரம்புகள் உண்டு. நடப்புக் கணக்குகளில் வரம்புகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம், இது வணிகங்களுக்கு வசதியானது.
எது உங்களுக்கு சிறந்தது?
சேமிப்பு கணக்கா அல்லது நடப்புக் கணக்கா என்பதைத் தீர்மானிப்பது உங்கள் தனிப்பட்ட அல்லது வணிகத் தேவைகள் தான்.
- தனிப்பட்ட பயன்பாட்டிற்கு, சேமிப்பு மற்றும் குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளுக்கு சேமிப்பு கணக்கு போதுமானது. ஒரு வேளை நீங்கள் ஊதியம் வாங்கும் நபர் என்றால் சேமிப்பு கணக்கே உங்களுக்கு சிறந்தது.
- வணிக பயன்பாட்டிற்கு மற்றும் அதிக பரிவர்த்தனைகளுக்கு நடப்புக் கணக்கு அவசியமானது. வணிக நோக்கத்திற்காக நீங்கள் ஒரு வங்கி கணக்கை துவங்குவது பின்னர் உங்களுக்கு சிரமங்களை தரலாம்.
7 மார்., 2025
by
Porul
வருமான வரி பிடித்தம்
வருமான வரி பிடித்தம் அல்லது TDS என்பது இந்தியாவில் உள்ள வருமானம் ஈட்டும் நபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரித் தொகையை முன்கூட்டியே வருமான வரியாக பிடித்தம் செய்வது ஆகும்.இந்திய வருமான வரிச் சட்டம், 1961 இதை வலியுறுத்துகிறது.
ஏன் முன்னரே பிடித்தம் செய்யப்படுகிறது?
இந்திய அரசுக்கு ஒரு நிலையான வருவாயை முன்னரே இது பெற்று தருவதோடு, வரி ஏய்ப்பை தடுத்து வரி செலுத்தும் மக்களை அதிகப்படுத்துகிறது.
எ.கா: ஒவ்வொரு வணிக ஆண்டின் இறுதியில் வரி தொகையை செலுத்த மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. வணிக ஆண்டின் இறுதிக்காக அரசுகள் காத்திருப்பதை தவிர்க்க முன்னரே அதில் ஒரு விழுக்காடு பிடித்தம் செய்யப்படுவதால் அரசின் செலவினங்களை தடையில்லாமல் மேற்கொள்ள முடியும்.
சம்பளம்/ஊதியம் வாங்குவோருக்கான வருமான வரி பிடித்தம்
வருமான வரிச் சட்டம், 1962 192-ம் சட்டப்பிரிவின் படி பணியில் உள்ள மாத ஊதியம் பெறுவோர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு தொகையை வருமான வரி பிடித்தமாக (TDS) அரசிற்கு செலுத்த வேண்டும். இதை ஊழியரிடத்தில் இருந்து பெற்று அரசிற்கு செலுத்த வேண்டியது பணியளிப்பவரின் கடமை ஆகும்.
க்கு அமர்த்துபவர்பனி பணிக்கு அமர்த்துபவர்